Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காரின் பாடல் இசையை குறைக்க சொன்ன நபர் மோதித்தள்ளப்பட்டு மரணம்
தற்போதைய செய்திகள்

காரின் பாடல் இசையை குறைக்க சொன்ன நபர் மோதித்தள்ளப்பட்டு மரணம்

Share:

தமது வீட்டின் முன் புறம் உள்ள ஒருவர்த்தக மையத்தில் காரை நிறுத்தி மிக வேகமாக பாடல் இசையை போட்டு, கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்த நபர்களை பாடலின் சத்தத்தை குறைக்க சொன்ன நபர் , காரினால் மோதப்பட்டு கொல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட கும்பல் நடத்திய இந்த அராஜக செயல் குறித்து போ​லீசார் ​தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா, Jalan Pokok Mangga, Kampung Padang, Baru 3, பிளாஸா பண்டான் மாலி​ம், வளாகத்தில் நிகழ்ந்தது. காரினால் மோதப்பட்டு சுமார் 20 மீட்டர் ​தூரம் இழுத்து செல்லப்பட்ட 57 வயது நபர், கடுமையான காயங்களுடன் மலாக்கா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.


எனினும் தலையில் ஏற்பட்ட கடும் காயத்தினால் அவர் அதிகாலை 2.45 மணியள​​வில் ​உயிரிழந்ததாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்த அராஜக செயலை நடத்திய நபர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerana tegur bunyi bising, bapa maut dirempuh pemandu mabuk

Related News