Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தீர்மானத்தை வாபஸ் பெற்றார் அகமட் ஜாஹிட்
தற்போதைய செய்திகள்

தீர்மானத்தை வாபஸ் பெற்றார் அகமட் ஜாஹிட்

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று நாடளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் தாசெக் கெகோர் எம்.பி. வான் சைபுல் வான் ஜான் ஐ, மக்களவைக்கூட்டத்தில் பங்கேற்பதிலிருந்து 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்வதற்கு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கொண்டு வரவிருந்த தீர்மானத்தை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் பிரதமர் அன்வாரின் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முன்வைத்த வான் சைபுல் வான் ஜான், தாம் கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிப்பதற்கு மக்களவை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதால், அந்த எம்.பி.யை இடை நீக்கம் செய்வதற்கு தாம் கொண்டு வரவிருந்த தீர்மானத்தை மீட்டுக்கொள்வதாக அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

தவிர அந்த குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளவும், வாபஸ் பெறவும் வான் சைபுல் முடிவு செய்ததால், அவருக்கு எதிராக 6 மாத கால இடைநீக்க நடவடிக்கையை முன்மொழிய தாம் உத்தேசிக்கவில்லை என்று துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்