May 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது

Share:

மாசுப்பட்டினால் நீர் விநியோக சேவை நிறுத்தப்பட்ட சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம், இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததால் போர்ட்டிக்சன் வட்டாரத்திலும், சிரம்பானில் ஒரு பகுதியிலும் கிட்டத்தட்ட 37 ஆயிரம் பயனீட்டாளர்கள் நீரின்றி சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேங்கர்கள் மூலம் நீர் சேவை வழங்கப்பட்டு வந்ததாக அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News