Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

Share:

புத்ராஜெயா, மார்ச் 5 -

ஒன்பது ஆண்டுகளுக்கு சீக்கிய வர்த்தப் பெண்மணி ஒருவரை கடத்திச் சென்று, கொன்று, சடலத்தை பினாங்கு இரண்டாவது பாலத்திலிருந்து வீசிய குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆடவர்களுக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனைக்கு பதிலாக தலா 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. .

32 வயது A. மலர்விழி, 37 வயது ஜ. Sunil Singh மற்றும் 30 வயது சி . கவின்முகிலன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வாசிர் அலாம் மைடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, சன்வே பிராமிட் அருகில் ஒரு கட்டுமானத் தளத்திலிருந்து வர்த்தகப் பெண்மணியான Balveer Kaur என்பவரை கடத்தி சென்று, அவரின் குடும்பத்திடமிருந்து 20 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரி மிரட்டியதுடன், அந்தப் பெண்மணியை கொன்று, சடலத்தை கடலில் வீசிய குற்றத்திற்காக அந்தப் பெண்மணியிடம் வேலை செய்த சுனில் சிங் உட்பட மூவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்