சுங்காய் கொலோக், ஏப்ரல் 29-
தாய்லாந்து, சுங்காய் கொலோக், கம்போங் பாசேமாஸ் -சில் வெடிகுண்டு தாக்கிய சம்பவ தொடர்பில் அந்நாட்டின் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12.05 மணியளவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுங்காய் கொலோக் பகுதியை சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை இச்சம்பவம் நிகழ்ந்ததாக சுங்காய் கொலோக், மாவட்ட போலீஸ் தலைவர் போல் கொல் ஜட்சடாவிட் இன்ப்ராப்பன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோந்து பணிக்கு செல்லும் வழியில் சந்தேகிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஜட்சடாவிட் இன்ப்ராப்பன் கூறினார்.
இவ்விபத்தில் படுங்காயத்திற்கு ஆளான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் சிகிச்சைக்காக சுங்காய் கொலோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.








