கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று அரசாங்கப் பேச்சாளரும், ஒற்றுமைத்துறை அமைச்சருமான ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் இதனை தெரிவித்துள்ளதாக ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.
இவ்விபத்து தொடர்பாக தொடக்க கட்ட விசாரணையின் உள்ளடக்க அம்சங்களின் சிலவற்றை தற்காப்பு அமைச்சர் கலீத் நோர்டின் அமைச்சரவைக்கு விளக்கம் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
லுமூட் அரச மலேசிய கடற்படைத்தளத்தில் 90 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டிய நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டு விழுந்த சம்பவத்தில் சித்தியவானை சேர்ந்தலெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட பத்து வீரர்கள் உயிரிழந்தனர்.








