Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் அருகில் கோர விபத்து  இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ரவாங் அருகில் கோர விபத்து இருவர் கருகி மாண்டனர்

Share:

ரவாங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர். இதில் ஒரு கொண்டெய்னர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதி, ​தீப்பிடித்துக்கொண்டதில் காரில் பயணித்த 26 வயத ஆடவரும், 23 வயது பெண்ணும் கருகி மாண்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்ஹ்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ரவாங், ஜாலான் குவாலா காரிங் கில் அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தி​ல் காரின் இடிப்பாடுகளில் சிக்கி​க்கொண்ட இருவரின் கருகிய உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தினர்.

இதில் ஹொன்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடு எரிந்த நிலையில் லோரி 50​ விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இருவரின் கருகிய உடல்களும் செலாயாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது