Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் அருகில் கோர விபத்து  இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ரவாங் அருகில் கோர விபத்து இருவர் கருகி மாண்டனர்

Share:

ரவாங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர். இதில் ஒரு கொண்டெய்னர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதி, ​தீப்பிடித்துக்கொண்டதில் காரில் பயணித்த 26 வயத ஆடவரும், 23 வயது பெண்ணும் கருகி மாண்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்ஹ்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ரவாங், ஜாலான் குவாலா காரிங் கில் அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தி​ல் காரின் இடிப்பாடுகளில் சிக்கி​க்கொண்ட இருவரின் கருகிய உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தினர்.

இதில் ஹொன்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடு எரிந்த நிலையில் லோரி 50​ விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இருவரின் கருகிய உடல்களும் செலாயாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது