நாரதிவாட், முயாங், ஜாலான் ஃபூ பக்டி -கில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு மலேசியர்கள் உட்பட எட்டு பேர் படுங்காயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த இந்த சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகின்றது. இது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இச்சம்பவத்தின் போது 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் பலத்த காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சோங்க்லா, மலேசிய கான்சல் ஜெனரல், அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கோலோக் நதி, கம்போங் பசேமாசில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.








