Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, மார்ச் 20 -

பினாங்கு, பத்து பெரிங்கி கில் கடந்த வாரம் பள்ளிவாசலில் மேண்டுமென்றே மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி தொந்தரவு செய்த மூதாட்டி ஒருவருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 65 வயதுடைய சோபியா அப்துல் மாஜிட் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பது பெரிங்கி ஏர் ராஹ்மான்னில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

குற்றவியல் சட்டம் 298 பிரிவின் கீழ் இக்குற்றச்சாட்டு அமைக்கப்பட்டிருப்பதுடன் குற்றம் என்று நிரூமிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அப்பெரியவரின் உடல்நலனை சோதனையிடுவதற்கு Ulu Kinta மருத்துவமனையில் ஒரு மாதக் காலம் அனுமதித்து கண்காணிப்பதற்கு மாஜிஸ்திரேட் நாட்ராதும் நாயிம் சைடி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்