Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 5 கார்கள் சேதமடைந்தன
தற்போதைய செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 5 கார்கள் சேதமடைந்தன

Share:

செராஸ், மே 28-

செராஸ், அலாம் டாமாய் -யில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரண்டு பெரோடுவா மைவி, பெரோடுவா விவா, டொயோட்டா வியோஸ் உட்பட ஹோண்டா HRV ஆகிய கார்கள் பாதிக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து இரவு 11.55 மணியளவில் போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாகவும், பினாங்கிலிருந்து வந்து கொண்டிருந்த அப்பேருந்து அருகிலுள்ள பயணிகள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபத்துக்குள்ளாகியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் துணைத்தலைவர் கண்காணிப்பாளர் சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார்.

33 வயது அப்பேருந்து ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவ்வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக சுஃபியன் அப்துல்லா கூறினார்.

சம்பந்தப்பட்ட பேருந்தில் பயணித்த 11 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சுஃபியன் அப்துல்லா பதிலளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து