May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட 456 விபத்துக்கள்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட 456 விபத்துக்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கள் கடந்த ஆண்டு மட்டுமே 14 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு 400 விபத்துக்களே பதிவாகியிருந்த வேளையில் கடந்த ஆண்டு 456 விபத்துக்களாக அதிகரித்து காணப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

ஆனால், பணியின் போது விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டினை காட்டிலும் கடந்த ஆண்டு சற்று குறைவாகவே பதிவாகியுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு பணியின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் 31 ஆக இருந்த போது கடந்த ஆண்டு 25 ஆக மட்டுமே பதிவாகியிருப்பதாக ருஸ்டி முகமட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதுமான ஓய்வுகளை பெற்றிருப்பதை உறுதி செய்த பின்னர் பணியில் ஈடுபட வேண்டும் என்று ருஸ்டி முகமட் கேட்டுக் கொண்டார்.

Related News