நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்கும் நோக்கில், புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறையை இலக்கவியல் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய நாடாளுமன்றத்திடம் இன்று ஒப்படைத்துள்ளது.
இதன் ஒப்படைப்பு விழாவை இலக்கவியல் அமைச்சர் சிங் டியோ முன்னின்று நடத்தினார். 'கோவ்டெக் மலேசியா' பிரிவின் தொழில்நுட்பப் பங்களிப்பில் உருவான இப்புதிய முறை, பாரம்பரிய பிடிஎஃப் ஆவணங்களுக்குப் பதிலாக, அதிவேகத் தேடல், சொல் பகுப்பாய்வு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கொண்டு தகவல்களை வடிகட்டும் வசதிகளைக் கொண்டுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
நாடாமன்ற கட்டட வளாகத்தில் திறன்மிகு 'ஹென்செர்ட்' முறையை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.
மக்களாட்சித் தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டம், '2030 செயற்கை நுண்ணறிவு நாடு' இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும் என்று கோபிந்த சிங் வர்ணித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற சபா நாயகர் Tan Sri Johari Abdul மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.











