May 22, 2026
Thisaigal NewsYouTube
லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற மூன்று  போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற மூன்று போலீசார் கைது

Share:

ஜொகூர், மார்ச் 28-

ஜொகூர், மெர்சிங் -கில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மூன்று காவல்துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் 36 க்கும் 42 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்களை ஜொகூர், எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் எண்ணெய் பனை மற்றும் உரங்களை ஏற்றிச் சென்ற அந்த லாரி ஓட்டுநரிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் 7,800 வெள்ளி லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் இன்று காலை 8:30 மணியளவில் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரிமாண்டிற்காக கொண்டு செல்லப்பட்டதாக ஜொகூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் அஸ்மி அலியஸ் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு