May 22, 2026
Thisaigal NewsYouTube
11 வயது மாற்றுத்திறனாளி ஆற்றில் மூழ்கினான்
தற்போதைய செய்திகள்

11 வயது மாற்றுத்திறனாளி ஆற்றில் மூழ்கினான்

Share:

கெடா, மார்ச் 11 -

கெடா, முக்கிம் ஜெனெரி வில் உள்ள சுங்கை கம்பூங் தாலா என்கிற ஆற்றில் மாற்றுத்திறனாளியான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 11 வயதுடைய முகமாட் இசாஹார் அசாஹார் காணாதது குறித்து அவரின் தந்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறிப்பிடப்பட்ட ஆற்றில் சுயநினைவற்ற நிலையில் அச்சிறுவன் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று மாலை 5 மணியளவில் தனது மகன் வீட்டில் இல்லாததை அறிந்து பாதிக்கப்பட்டவரின் 49 வயது தந்தை, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்ததாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் அப்துல் ராசாக் ஒஸ்மான்தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அச்சிறுவன் உயிரிழந்து, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதாக அப்துல் ராசாக் மேலும் விவரித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக அச்சிறுவனின் உடல் சிக்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

Related News