May 22, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மால் சாலேஹ் தடுத்துவைக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

டாக்டர் அக்மால் சாலேஹ் தடுத்துவைக்கப்பட்டார்

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்திருந்த KK மார்ட் நிறுவனத்தை புறக்கணிக்கும் பரப்புரையை மேற்கொண்டு வந்த உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ், இன்று காலையில் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அந்த தகவலை முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

டங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நாளை விளக்கமளிக்கவிருந்த நிலையில், இன்று தாம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசிடம் முழு ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும் டாக்டர் அக்மால் சாலேஹ் கூறினார்.

தமக்கு என்ன நேர்ந்தாலும், தமது நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக்கொள்ள போவதில்லை என்றாரவர்.

சபாவில் உம்னோ இளைஞர் பிரிவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக டாக்டர் அக்மால் சாலேஹ் அங்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு