ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனத்த மழையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,878 பேராக அதிகரித்துள்ளது. நேற்று 2,162 பேராக இருந்த இந்த எண்ணக்கை, இன்று இரண்டு ம டங்காக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் 6 மாவட்டங்களில் 1,575 குடும்பங்கள் 54 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
ஜோகூர்பாரு, கூலாய், கோத்தா திங்கி, குளுவாங், பொந்தியான் மற்றும் சிகமாட் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வெள்ளி மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.








