Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.33.7 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ.33.7 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், மே 29-

மெத்திலினெடியோக்சி மெத்தம்பேட்டமைன் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதற்காக போலீசார் இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 33.65 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50 மணியளவில் செந்தூலில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 32 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

இச்சோதனையில் ஊதா நிற பவுடர்களை உள்ளிட்ட 13 ஜாடிகள், 213.4 கிலோகிராம் எடையுள்ள MDMA ஜூஸ் பவுடர் அடங்கிய 499 பச்சை நிற பிளாஸ்டிக் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவ் கோக் சின் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பாக 10 குற்றப்பதிவுகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த வேளை, வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக காவ் கோக் சின் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து