கோத்தா கினபாலு, மே 06-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் - மிற்கு ஆதரவு வழங்கியதற்காக பெர்சத்து கட்சியை சேர்ந்த ஆறு MP - க்களின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான முடிவு விரைவில் மஜ்லிஸ் பிம்பினான் தெர்திங்கி கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட ஆறு MP க்களை மட்டுமே தொடர்புடையது அல்ல.
மாறாக, அனைத்து பெர்சத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும் என்று முகைதீன் வலியுறுத்தினார்.
பெர்சத்து- வின் அரசியலமைப்பு சீர்திருத்தம், சம்பந்தப்பட்ட MP - க்கள் அவர்களின் பதவி உரிமையை தானாகவே காலாவதியாக்குவதுடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களும் காலியாகிவிடும் மற்றும் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையும் ஏற்படும் என்று முகைதீன் விளக்கினார்.
பெர்சத்து கட்சியின் அரசியலமைப்பு சீர்திருத்தம் ROS - யினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பிரதமரை ஆதரிக்கும் ஆறு MP-க்களின் இடங்களிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்துக்களும் கேட்கப்பட்டதாக முகைதீன் குறிப்பிட்டார்.








