Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26.

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் -கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் வெளிநாட்டவர் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 40 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குத்திக் கொண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் ஷாஹ்ருல்நிசாம் ஜாபார்@ இஸ்மாயில் தெரிவித்தார்.

சண்டையில் பாதிக்கப்பட்டவர் முதலில் அந்நபரை உதைத்த வேளையில் குற்றசாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவர் அதை பொருத்து கொள்ளாது மேலும் பலமுறை அந்நபரை குத்தி காயம் ஏற்படுத்தியதாக ஷாஹ்ருல்நிசாம் குறிப்பிட்டார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்ததாக அவர் மேலும் விளக்கமளித்தார்.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டு மார்ச் 29 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஷாஹ்ருல்நிசாம் இன்று அறிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை