Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்

Share:

முடிதிருத்தும் கடைகள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்ட மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்குப் பணிக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

முன்னதாக, முடக்கப்பட்ட மூன்று தொழில்
துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான விரிவான
விஷயங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இன்னும் விரிவான விஷயங்கள் இருந்தால், வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அவை குறித்து தாம் முறையாக அறிவிக்கவிருப்பதாக இன்று H.R.D. Corp. நிறுவனத்தின் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது