May 22, 2026
Thisaigal NewsYouTube
NUBE-யின் குற்றச்சாட்டு குறித்து கருத்துக்க அமைச்சர் மறுப்பு
தற்போதைய செய்திகள்

NUBE-யின் குற்றச்சாட்டு குறித்து கருத்துக்க அமைச்சர் மறுப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்கான ஒரு மாத சம்பளமாக உதவித் தொகை வழங்கப்படும் விவகாரத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் ​என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொ​​ழிற்சங்கமான NUBE கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்டீவன் சிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது தொடர்பாக NUBE- யின் அனைத்து கிளைகளும் போ​லீசில் புகார் செய்து இருப்பது குறித்தும் அமைச்சர் ஸ்டீவன் சிம் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த விககாரம் உரிய நடவடிக்கைக்காக தொழிலியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அது குறித்து கருத்துரைக்க தாம் விரும்பவில்லை என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய ​பெரும் பொறுப்பில் இருக்கும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், வங்கி ஊழியர்களின் பிரதான தொழிற்சங்கமான NUBE- யின் பங்கேற்பு இல்லாமல், வர்த்தக வங்கிகளின் சங்கமான MCBA- வுடன் கூட்டு சேர்ந்து தன்மூப்பாக முடிவு எடுத்து இருப்பது மூலம் அமைச்சர் ஸ்டீவன் சிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று கூறி, NUBE-யின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு தினங்களாக அமைச்சருக்கு எதிராக போ​லீசில் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

Related News

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை