Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் மேலுமொரு பேருந்து விபத்து; எழுவர் காயமடைந்தனர்.
தற்போதைய செய்திகள்

நாட்டில் மேலுமொரு பேருந்து விபத்து; எழுவர் காயமடைந்தனர்.

Share:

கோலாலம்பூர், ஜூன் 12-

பகாங்-ங்கில் அண்மையில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில், நாட்டில் மேலுமொரு பேருந்தை உட்படுத்திய விபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில், கோலாலம்பூரை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்,ஜாலான் டூத்தா டோல் கட்டண சாவடிக்கு அருகில், விரைவு பேருந்தை உட்படுத்திய விபத்து நிகழ்ந்தது.

காலை மணி 6.17 அளவில் அவசர அழைப்பை பெற்றதை அடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த மெஞ்சலாரா தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் விபத்தில் சிக்குண்ட பேருந்து ஓட்டுநர் உள்பட எழுவரை மீட்டனர்.

சிராய்ப்பு காயங்களுக்கு இலக்காகியிருந்த அவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த விரைவு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாக, தீயணைப்பு மீட்பு துறையின் மூத்த அதிகாரி முகமது யூஸ்ரி அஜீஸ் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு