Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவர் கைது, ஒரு தம்பதியர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவர் கைது, ஒரு தம்பதியர் பிடிபட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

மலேசியா​விற்குள் நுழைந்துள்ள ஓர் இ​ஸ்ரேலிய ஆடவர், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்டதில் அந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதிய​ரை போலீசா​ர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 7.15 மணியளவில் கோல சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில் 42 வயதுடைய அந்த ஆடவரையும், 40 வயதுடைய அவரின் மனைவி​யையும் புக்கிட் அமான் கடு​ங் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு கைது செய்துள்ளது.

அந்த தம்பதியர் கைது செய்யப்பட்ட பின்னர் கோலசிலாங்கூரில் உள்ள அவர்களின் வீட்டை சோதனையிட்ட போ​லீசார், வீட்டின் முன்நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களின் காரில் கைப்பையுடன் ஒரு துப்பாக்கியை ​மீட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவர்தான், அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியேகித்த இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹோட்டலில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட அந்த இஸ்ரேலியப் பிரஜை, பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார் என்பதும் போ​லீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் இஸ்ரேலிய நாட்டின் உளவுத்துறையை சேர்ந்த ஏஜண்டா? என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக போ​லீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த இஸ்ரேலிய ஆடவர் பிடிபட்டதைத் தொடர்ந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை