Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவர் கைது, ஒரு தம்பதியர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவர் கைது, ஒரு தம்பதியர் பிடிபட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

மலேசியா​விற்குள் நுழைந்துள்ள ஓர் இ​ஸ்ரேலிய ஆடவர், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்டதில் அந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதிய​ரை போலீசா​ர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 7.15 மணியளவில் கோல சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில் 42 வயதுடைய அந்த ஆடவரையும், 40 வயதுடைய அவரின் மனைவி​யையும் புக்கிட் அமான் கடு​ங் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு கைது செய்துள்ளது.

அந்த தம்பதியர் கைது செய்யப்பட்ட பின்னர் கோலசிலாங்கூரில் உள்ள அவர்களின் வீட்டை சோதனையிட்ட போ​லீசார், வீட்டின் முன்நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களின் காரில் கைப்பையுடன் ஒரு துப்பாக்கியை ​மீட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவர்தான், அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியேகித்த இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹோட்டலில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட அந்த இஸ்ரேலியப் பிரஜை, பிரான்ஸ் நாட்டின் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார் என்பதும் போ​லீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் இஸ்ரேலிய நாட்டின் உளவுத்துறையை சேர்ந்த ஏஜண்டா? என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக போ​லீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த இஸ்ரேலிய ஆடவர் பிடிபட்டதைத் தொடர்ந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்