Jul 28, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை 12 வயது சிறுவனை பணியிலிருந்து காப்பாற்றியது
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை 12 வயது சிறுவனை பணியிலிருந்து காப்பாற்றியது

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

கோலாலம்பூர், பசார் போரொங் கில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் கூதிப் திடீர் சோதனையில் 12 வயதுடைய தொழிலாளியான சிறுவன் ஒருவன் குடிநுழைவுத்துறை அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டான்.

மலாய் மொழியில் பேச முடியாத அச்சிறுவன் காய்கறி, மீன் ஆகிய பொருட்களை லாரியில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இந்திய சிறுவனுக்கு தமிழ்மொழி பேச தெரிந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கு அச்சிறுவன் தரைவழியாக நுழைந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த மலேசியாவிற்கு வந்ததாகவும் மியன்மாரில் உள்ள தனது குடும்பத்தை விட்டு பிழைப்பிற்காக தொலைத்தூரத்தில் வந்து வேலை செய்வதாகவும் விசாரணையில் அறியப்பட்டது.

இச்சோதனையில் கைது செய்யப்பட்ட 38 சட்டவிரோத குடியேறிகளில் இச்சிறுவனும் உள்ளடங்குவார் என்று கோலாலம்பூர், மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் வாண் மொகமாட் சவுபீ வான் யூசுப் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

குடிநுழைவுத்துறை 12 வயது சிறுவனை பணியிலிருந்து காப்பாற்றியது | Thisaigal News