Mar 18, 2026
Thisaigal NewsYouTube
துளியும் நேரமில்லை; பள்ளி வேன் ஓட்டுநர்கள் கூறும் காரணம்.
தற்போதைய செய்திகள்

துளியும் நேரமில்லை; பள்ளி வேன் ஓட்டுநர்கள் கூறும் காரணம்.

Share:

சிலாங்கூர், மார்ச் 22.

சிலாங்கூரில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சாலை போக்குவரத்து சோதனைகளில், ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டிருக்காத பள்ளி வேன் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், 72 பள்ளி பேருந்துகள், 34 வாகனங்கள், உட்பட 53 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சாலை வரியைப் புதுப்பிக்காதது, பாதுகாப்பு காப்புறுதியைக் கொண்டிருக்காதது மற்றும் இதர குற்றங்களுக்காகவும் அந்த குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணம் அதிகம்; அதிகமான வேலைப் பணிகளால் ஓட்டுநர் உரிமம் எடுக்க நேரமில்லை. இவ்வாறாக பல அலட்சியமான காரணங்களை தனியாருக்கு சொந்தமான வேன் ஓட்டுநர்கள் கூறுவதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்து துறை இயக்குநர் ஆஸ்ரின் பொர்ஹான் கூறினார்.

பள்ளி வேன் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் விரைந்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமென நினைவுறுத்திய அவர், தமது தரப்பு இதுக்குறித்து அடிக்கடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை