கிளந்தான், மாச்சாங், ஜாலான் ஹூத்தான் குயின் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர், குற்றப்பதிவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தகரான 38 வயதுடைய அந்த நபர், உபரி பாகங்கள் விற்பனை கடைக்கு முன், தனது காரில் அமர்ந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமாட் சாக்கி ஹருன் சாக்கி ஹருன் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளோட்டி, அந்த வாகனத்திற்கு அருகில் மிக நெருக்கமான இடைவெளியில் அந்த வர்த்தகரை சுட்டுக் கொன்று இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முஹமாட் சாக்கி குறிப்பிட்டார்.
இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நடந்த தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


