கிளந்தான், மாச்சாங், ஜாலான் ஹூத்தான் குயின் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர், குற்றப்பதிவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தகரான 38 வயதுடைய அந்த நபர், உபரி பாகங்கள் விற்பனை கடைக்கு முன், தனது காரில் அமர்ந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமாட் சாக்கி ஹருன் சாக்கி ஹருன் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளோட்டி, அந்த வாகனத்திற்கு அருகில் மிக நெருக்கமான இடைவெளியில் அந்த வர்த்தகரை சுட்டுக் கொன்று இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முஹமாட் சாக்கி குறிப்பிட்டார்.
இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நடந்த தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது


