கிளந்தான், மாச்சாங், ஜாலான் ஹூத்தான் குயின் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர், குற்றப்பதிவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர்த்தகரான 38 வயதுடைய அந்த நபர், உபரி பாகங்கள் விற்பனை கடைக்கு முன், தனது காரில் அமர்ந்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமாட் சாக்கி ஹருன் சாக்கி ஹருன் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளோட்டி, அந்த வாகனத்திற்கு அருகில் மிக நெருக்கமான இடைவெளியில் அந்த வர்த்தகரை சுட்டுக் கொன்று இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முஹமாட் சாக்கி குறிப்பிட்டார்.
இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நடந்த தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்


