ஹரி ராயாவையொட்டி, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 6 வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கும் தம்முடைய மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்வில் மக்கள் திரளாக கலந்துக்கொள்ளும் படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தப் பொது உபசரிப்பு, வெகு விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மக்களின் வருகையைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பொது உபசரிப்பு, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை alor setar ரில் நடைபெறும். அதே வேளையில் மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கு, பெர்மாதா பாவ்விலும், மறுநாள் காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை சிரெம்பானிலும் பொது உபசரிப்பு நடைபெறும். இதர மூன்று நிகழ்வுகள் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


