ஹரி ராயாவையொட்டி, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 6 வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கும் தம்முடைய மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்வில் மக்கள் திரளாக கலந்துக்கொள்ளும் படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தப் பொது உபசரிப்பு, வெகு விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மக்களின் வருகையைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பொது உபசரிப்பு, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை alor setar ரில் நடைபெறும். அதே வேளையில் மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கு, பெர்மாதா பாவ்விலும், மறுநாள் காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை சிரெம்பானிலும் பொது உபசரிப்பு நடைபெறும். இதர மூன்று நிகழ்வுகள் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


