ஹரி ராயாவையொட்டி, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 6 வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கும் தம்முடைய மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்வில் மக்கள் திரளாக கலந்துக்கொள்ளும் படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தப் பொது உபசரிப்பு, வெகு விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மக்களின் வருகையைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பொது உபசரிப்பு, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை alor setar ரில் நடைபெறும். அதே வேளையில் மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கு, பெர்மாதா பாவ்விலும், மறுநாள் காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை சிரெம்பானிலும் பொது உபசரிப்பு நடைபெறும். இதர மூன்று நிகழ்வுகள் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


