ஹரி ராயாவையொட்டி, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 6 வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கும் தம்முடைய மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்வில் மக்கள் திரளாக கலந்துக்கொள்ளும் படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தப் பொது உபசரிப்பு, வெகு விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மக்களின் வருகையைத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது பொது உபசரிப்பு, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை alor setar ரில் நடைபெறும். அதே வேளையில் மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பினாங்கு, பெர்மாதா பாவ்விலும், மறுநாள் காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை சிரெம்பானிலும் பொது உபசரிப்பு நடைபெறும். இதர மூன்று நிகழ்வுகள் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


