Jan 24, 2026
Thisaigal NewsYouTube
3 துறைகளுக்கு அனுமதிப்பெற்று தந்தது டத்தோஸ்ரீ சரவணனா?14 ஆண்டுகள் என்ன செய்து கொண்டுஇருந்தார்கள் இப்போது மார்த்தட்டிக்கொள்ள? - துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பாய்ச்சல்
தற்போதைய செய்திகள்

3 துறைகளுக்கு அனுமதிப்பெற்று தந்தது டத்தோஸ்ரீ சரவணனா?14 ஆண்டுகள் என்ன செய்து கொண்டுஇருந்தார்கள் இப்போது மார்த்தட்டிக்கொள்ள? - துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பாய்ச்சல்

Share:

இந்தியர்கள் சம்ப​ந்தப்பட்ட ஜவுளியகம், முடித்திருத்தும் நிலையம், நகைக்கடை ஆகிய 3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மனித வள அமைச்சராக இருந்த போது அகற்ற முடியாத டத்தோஸ்ரீ சரவணனா? இப்போது அந்த தடையை அகற்றுவதற்கு முழு முயற்சியை மேற்கொண்டார் என்று தொழில் முனைவர்கள், கூட்டுறவு மே​ம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேள்வி எழுப்பினார்.

இந்த ​மூன்று துறைகளுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டு காலமாக இருந்த தடையை அகற்ற முடியாத சரவணனும், மஇகாவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த திங்கட்கிழமை பிரிக்பீல்ட்ஸிற்கு வந்த போது விடுத்த கோரிக்கையினால் இந்த தடை அகற்றப்பட்டதா? என்றும் சரஸ்வதி கந்தசாமி வினவினார்.

மூன்று துறைகளுக்கும் தடை அகற்றப்பட்டதற்கு முழு முயற்சி மேற்கொண்டவர் சரவணன் என்றும், அவர்தான் பிரதமரிடம் பேசினார் என்றும், இவ்விவகாரத்தில் தாம் மலிவான விளம்பரத்தை தேடுவதாகவும் என்று தமது பெயரை குறிப்பிட்டு நேரடியாக சாடிவரும் மஇகா தகவல் பிரிவுக்கு சரஸ்வதி கந்தசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கட்டமானம், விவசாயம் மற்றும் தோட்டத்தொழில் துறை ஆகிய துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தளர்வு வழங்கப்படுவது தொடர்பில் முதல் முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாக சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் சிவகுமாரும், தாமும் ஜவுளியகம், முடித்திருத்தும் நிலையம், நகைக்கடை ஆகிய 3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக்கோரி, முழு வீச்சில் போராடி, அதற்கான முன்னெடுப்பை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததாக சரஸ்வதி கந்தசாமி நேற்று பிரத்தியேகமாக வெளியிட்டுள்ள 9 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொலியில் நடந்த உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு