Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்கான த​லைமைத்துவப் பயி​ற்சி
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான த​லைமைத்துவப் பயி​ற்சி

Share:

நாட்டில் முதன் முதலாக மாத சம்பளத்தை அமல்படுத்தும்படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து, அதை ஒரு சட்டமாக கொண்டு வர வழி வகுத்தது தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது வரலாறாகும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் நினைவுபடுத்தினார்.

ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்களின் மாத சம்பளம உயர்வு பெற வேண்டி தொழிலியல் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். நாட்டின் மேம்பாட்டிற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விகாரம் தொடர்பான வழக்கில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றுமே விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று டத்தோ ஜி.சங்கரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிப்பாங் பாகான் லாலாங் கடற்கரை பகுதியில் உள்ள சேரி மலேசியா ஹோட்டலில் சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தோட்டத் தலைவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து,நற்சான்றிதழ் வழங்கும் போது டத்தோ ஜி.சங்கரன் இதனை தெரி​வித்தார்.

தோட்ட ​தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்காக நடத்தப்படும் இது போன்ற தலைமத்துவப் பயிற்சி வாயிலாக கிடைக்கக்கூடிய அனுபவங்களை, தாங்கள் சார்ந்த தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் இதர உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது ​மூலம் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் உரிமை என்ன என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று ட​த்தோ ஜி. சங்கரன் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வை.தாமாசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 50 தோட்ட ​தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கு கொண்டவர்களு​க்கு டத்தோ ஜி. சங்கரன் , நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு