Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்கான த​லைமைத்துவப் பயி​ற்சி
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான த​லைமைத்துவப் பயி​ற்சி

Share:

நாட்டில் முதன் முதலாக மாத சம்பளத்தை அமல்படுத்தும்படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து, அதை ஒரு சட்டமாக கொண்டு வர வழி வகுத்தது தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது வரலாறாகும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் நினைவுபடுத்தினார்.

ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்களின் மாத சம்பளம உயர்வு பெற வேண்டி தொழிலியல் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். நாட்டின் மேம்பாட்டிற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விகாரம் தொடர்பான வழக்கில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றுமே விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று டத்தோ ஜி.சங்கரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிப்பாங் பாகான் லாலாங் கடற்கரை பகுதியில் உள்ள சேரி மலேசியா ஹோட்டலில் சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தோட்டத் தலைவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து,நற்சான்றிதழ் வழங்கும் போது டத்தோ ஜி.சங்கரன் இதனை தெரி​வித்தார்.

தோட்ட ​தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்காக நடத்தப்படும் இது போன்ற தலைமத்துவப் பயிற்சி வாயிலாக கிடைக்கக்கூடிய அனுபவங்களை, தாங்கள் சார்ந்த தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் இதர உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது ​மூலம் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் உரிமை என்ன என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று ட​த்தோ ஜி. சங்கரன் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வை.தாமாசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 50 தோட்ட ​தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கு கொண்டவர்களு​க்கு டத்தோ ஜி. சங்கரன் , நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்