Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்திற்கு பிறகு 122 பேர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்திற்கு பிறகு 122 பேர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

Share:

மலாக்கா, ஏப்ரல் 15-

மலாக்காவில் நேற்று மதியம் பெய்ந்த கனத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து இன்று காலை 8 மணி வரையில் மொத்தம் 122 பேர், மூன்று நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குடும்பங்களை உள்ளடக்கிய 12 பேர் தங்குவதற்கு நேற்று இரவு 11 மணியளவில் ஜாப்பெருன் ஆயர் கெரோஹ் மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் செயலாளர் காமரூல்ஷா முஸ்லீம் தெரிவித்தார்.

அலோர் காஜாவில் 25 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் டூரியான் துங்காள் இடைநிலைப்பள்ளியிலும் 7 குடும்பங்களை உள்ளடக்கிய 38 பேர் புக்கிட் பாலாய் ராயா -விலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக காமரூல்ஷா முஸ்லீம் கூறினார்.

இடைவிடாமல் பெய்ந்த கனமழையினால் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதாக காமரூல்ஷா முஸ்லீம் மேலும் தகவல் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்