Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கில் ஓட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கில் ஓட்டி உயிரிழந்தார்

Share:

5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி, வாகன சக்கரங்களில் அரைப்பட்டு உயிரிழந்த வேளையில் அவரின் நண்பர் கால் முறிவுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 207 ஆவது கிலோமீட்டரில் அலோர் காஜா அருகே நிகழ்ந்தது.

தொழிற்சாலை ஒன்றின் டெக்னிஷனாக பணியாற்றி வந்த 29 வயது எம்.குமரேசன் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷத் அபு அடையாளம் கூறினார்.

தலையிலும் வயிற்றிலும் கடும் காயத்திற்கு ஆளான குமரேசன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அர்ஷத் அபு குறிப்பிட்டார்.

Related News