ஒரு நிலைத்தன்மையான அரசாங்கத்தை நிலைநிறுத்தவதிலும், மலேசியா மீது முதலீட்டாளர்கள், உயரிய நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள 19 கட்சிகளும் தங்கள் கடப்பாட்டை நிருபிப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் ஆலோசனை மன்றத்கூட்டத்தில் உறுப்புக்கட்சிகள் இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. பொருளாதாரம்,முதலீடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதற்கு உறுப்புக்கட்சிகள் அனைத்தும் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகத் தலைவர் அஷ்ராஃப் வாஜிடி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


