Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளை கடத்த முயற்சித்த இரு தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளை கடத்த முயற்சித்த இரு தொழிலாளர்கள் கைது

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 24-

விமான சேவையை பயன்படுத்தி சரவாக்கிற்கு போதைப்பொருள்களை கடத்த முயற்சித்த இரண்டு கட்டுமான தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, அதிகாலை 4.11 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பெட்டிகளை சோதனையிட்டபோது 29 மற்றும் 44 வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் துணைத்தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அந்நபர்களின் பயணப் பெட்டியை சோதனையிட்ட போது 1.76 மில்லியன் வெள்ளி மதிப்பிலான methamphetamine என்கிற 7,000 கிராம் போதைப்பொருள், 5,960 கிராம் erimin 5 மாத்திரைகள் உட்பட 61 கிராம் ekstasi ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக சசிகலா தேவி குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே நான்கு குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்த வேளை, சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக சசிகலா தேவி விவரித்தார்.

அந்நபர்கள் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்