Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை

Share:

கூச்சிங் , மார்ச் 31 -

வாட்சாப் மற்றும் முகநூல் அகப்பக்கத்தில் வைரலாக பரவலாகி வரும் கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தொடர்பான அவதூறு விவகாரங்கள் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைக்க பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.21 மணியளவில் சுங்கை மாவோங் கில் உள்ள காவல் நிலையத்தில் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளரான அதிகா ச்யாரியா ஷாஹாருடின் இதுக்கு‌றி‌த்து ஒரு புகார் அளித்திருப்பதாக Sarawak காவல்துறை ஆணையர் டத்துக் மான்சா அதா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 பிரிவின் 233 - யின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக மான்சா அதா தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, துரோகம் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி, ஒருமித்த கருத்துகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டதுடன் தனது நற்பெயரையும் நம்பகத்தன்மையும் சீர்குலைக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு தவறான குற்றச்சாட்டு என்று கல்வி அமைச்சர் பட்லீன சீடேக் தெரிவித்திருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்