May 22, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது

Share:

நிலாய், மார்ச் 23.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 283 ஆவது கிலோமீட்டரில் தெற்கை நோக்கி, நிலாய் அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு 20 மாத கைக்குழந்தை ஒன்று காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக மாண்டது. .

கடந்த வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் பெரோடுவா பெட்சா ரகத்தை சேர்ந்த இரு கார்கள் மற்றும் டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம் ஒன்று சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் காரிலிருந்து அந்த பெண் குழந்தை தூக்கி எறியப்பட்டதாக நிலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி நான்கு பயணிகளுடன் 24 வயது ஆடவர் செலுத்திய டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற பெரோடுவா பெட்சா காரை மோதியதில் அந்த கார் மற்றொரு பெரோடுவா பெட்சா காரை மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த குழந்தை சிரம்பான், துவான்க்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் குழந்தை மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு