Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது

Share:

நிலாய், மார்ச் 23.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 283 ஆவது கிலோமீட்டரில் தெற்கை நோக்கி, நிலாய் அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு 20 மாத கைக்குழந்தை ஒன்று காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக மாண்டது. .

கடந்த வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் பெரோடுவா பெட்சா ரகத்தை சேர்ந்த இரு கார்கள் மற்றும் டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம் ஒன்று சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் காரிலிருந்து அந்த பெண் குழந்தை தூக்கி எறியப்பட்டதாக நிலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி நான்கு பயணிகளுடன் 24 வயது ஆடவர் செலுத்திய டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற பெரோடுவா பெட்சா காரை மோதியதில் அந்த கார் மற்றொரு பெரோடுவா பெட்சா காரை மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த குழந்தை சிரம்பான், துவான்க்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் குழந்தை மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை