மித்ரா பணிக்குழுவின் தலைவராக தம்மை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்து இருப்பது சற்றும் எதிர்பார்க்காததாகும் என்று Batu எம்.பி. பி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் தமக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக 27 வயது பிரபாகரன் குறிப்பிட்டார்.
எனினும் தம் மீது நம்பிக்கை வைத்து இப்பதவியை வழங்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரபாகரன் தெரிவித்தார். .
பிரதமரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதார உயர்விற்காக தம்மால் இயன்ற பங்களிப்பை மித்ராவிற்கு வழங்க தயாராக இருப்பதாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.








