Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பயங்கர தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயங்கர தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது

Share:

குளுவாங், தாமான் லியான் செங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில், மூன்று பேரை தனி தனி சோதனையின் போது போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் சிம்பாங் ரெங்காம் மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் போதைப் பொருள் எதுவும் உட்கொள்ளாதது சோதனையில் தெரிய வந்த வேளை, அதில் ஒருவர் மீது ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அந்நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுக்கு அவர் இலக்காகியிருப்பதாக பஹ்ரின் முகமது கூறினார்.

முன்னதாக, ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு முன்பு நபர் ஒருவரை மூன்று பேர் வன்மையான முறையில் தாக்குவதை போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து