Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விண்ணப்பம்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 16-

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவித்து இருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற தனது மேல்முறையீட்டு மனுவை ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினரால் விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தாம் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை மீண்டும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாம் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய குழுவினர் விசாரணை செய்ய வேண்டும் முகைதீன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் உதவி பதிவதிகாரி நூருல் அஸ்ரினா முகமது யூசுப் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமது வழக்கறிஞர் தேஹ் போஹ் தேய்க் மூலம் முகைதீன் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார்.

எனினும் இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை செய்ய வேண்டுமானால் அப்பீல் நீதிமன்றத் தலைவரிடம் கடித வாயிலாக விண்ணப்பிக்குமாறு முகைதீன் யாசினை பதிவதிகாரி நூருல் அஸ்ரினா கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்