நெகிரி செம்பிலான், பஹாவ் அருகிலுள்ள குவாந்தன் - செகாமட் சாலையில் சுற்றுலா பேருந்து மற்றும் டிரெய்லர் விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்த வேளை, 36 பேர் படுங்காயத்திற்கு ஆளாகினர்.
இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சம்பந்தப்பட்ட பேருந்தின் இரண்டு ஓட்டுநர் உட்பட 39 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் தடம் புரண்டதாக Rompin மாவட்ட போலீஸ் தலைவர் Deputi Superintendan Nor Azman Yusof கூறினார்.
Melaka, Jeram Masjid Tanah தேசிய பள்ளியிலிருந்து Terengganu - விற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லருடன் விபத்துக்குள்ளாகியதாக Nor Azman தெரிவித்தார்.
இவ்விபத்தில் 48 வயது Hasnatul Adilah Hassan, 29 வயது Mohd Adi Hasan உட்பட 60 வயது Hamzah Ahmad ஆகிய ஆசிரியர்கள் உயிரிழந்ததுடன் பலத்த காயங்களுக்கு ஆளாகியவர்கள் Rompin, Muadzam Shah மற்றும் Kuantan, Tengku Ampuan Afzan ஆகிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Nor Azman கூறினார்.
அதில், டிரெய்லர் ஓட்டுநர் காயம் ஏதுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 - யின் 41 (1) பிரிவின் கீழ் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.








