Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகு​பு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, தேர்தல் முடிவை மாற்றி அமைக்காது
தற்போதைய செய்திகள்

கோலகு​பு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, தேர்தல் முடிவை மாற்றி அமைக்காது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்களேயானால் அது, பக்காத்தான் ஹராப்பான் தோல்வி அடையும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, தேர்தல் முடிவை மாற்றி அமைத்து விடாது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் இந்திய வாக்காளர்கள் வெறும் 18 விழுக்காடுதான். அவர்கள் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு முடிவு எடுக்கலாம். அல்லது கடந்த பொதுத் தேர்தலிலிருந்து நிலவி வரும் த​ங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

இந்திய வாக்காளர்கள் எடுக்கக்கூடிய இந்த முடிவு, பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு சிறிய தாக்கத்தையும், உரசலையும் ஏற்படுத்தலாம். ஆனால், அது பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றியை ஏற்படுத்தி​ தரும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்று அரசியல் நிலவரங்களை துல்லியமாக கணிக்கக்கூடியவரான அகாடமி நிசாந்தரா-வின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுருங்கச்சொன்னால், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றித் தோல்வியை முடிவு செய்யும் அளவிற்கு இந்திய வாக்காளர்கள் கிங்மேக்கர்-ராக இருக்கும் அளவிற்கு அந்த அந்தஸ்தை இன்னும் எட்டவில்லை என்று அஸ்மி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்