Kedah, Kulim மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமின்றி இன்னும் சில பகுதிகளில் குடியேறியிருக்கும் மக்களின் பிரதான சிகிக்சை மையமாக திகழும் கூலிம் பொது மருத்துவமனைக்கு ஒரு புதிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையை அதன் தலைமை நிர்வாகி Dr Ruhaifi Ali, உள்துறை அமைச்சரும் கெடா மாநில மேம்பாட்டு திட்டத்தின் தலைவருமான Dato Sri Saifuddin Nasution - யிடம் முன்வைத்துள்ளார்.
இன்று காலை கூலிம் பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்திருந்த Saifuddin Nasution, அவ்விடத்தையும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான வசதிகள் இருக்கின்றனவா என்பதையும் பார்வையிட்டார்.
தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் 320 கட்டில்கள் மட்டுமே நிரப்பக்கூடிய வசதிகள் கொண்டிருப்பதாலும் மேலும் 220 கட்டில்கள் மற்றும் ஒரு சிறப்பு மையம் தேவைப்படுவதாகவும் Ruhaifi Ali கேட்டுக் கொண்டார். Kulim மருத்துவமனையின் மேம்பாட்டு திட்டங்களை குறித்தும் சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளின் சேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும் பிரதமர் Dato Sri Anwar Ibrahim - மிடம் விவாதிக்கப்பட இருப்பதாக Saifuddin Nasution தெரிவித்தார்.








