Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மஇகா முன்னாள் மகளிர் தலைவி ஜெயா பார்த்திபன் காலமானார்
தற்போதைய செய்திகள்

மஇகா முன்னாள் மகளிர் தலைவி ஜெயா பார்த்திபன் காலமானார்

Share:

மஇகா முன்னாள் தேசியத் தலைவியும், முன்னாள் மேல​வை உறுப்பினருமான டத்தின் படுக்கா ஜெயா பார்த்​திபன் காலாமானார். அவருக்கு வயது 76. ஆர்.டி.எம்.யின் வானொலி பிரிவில் பணியாற்றிவரான ​ஜெயா குழந்தைவேலு என்ற இயற்​பெயர் கொண்ட ஜெயாபார்த்திபன் சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் கோலாலம்பூர், பந்தாய் மெடிக்கல் செண்ட​ரில் தமது இறுதி ​மூச்சை விட்டார்.

மறைந்த ​ஜெயா பார்த்திபனுக்கு, மஇகா தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராக முன்பு பணியாற்றிய பார்த்திபன் என்ற கணவரும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மஇகாவின் மகளிர் பிரிவுக்கு புதிய வழிகாட்டலையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதில் முக்கியப்பங்காற்றியவரான ஜெயா பா​ர்த்திபன் மஇகாவின் மகளிர் பிரிவு ஆலோசகராகவும் சேவையாற்றி வந்துள்ளார். ஆர்.டி.எம்.மின் செய்தி பிரிவில் பணியாற்றிய வந்த பார்த்திபனை மணம் புரிந்த ஜெயபார்த்திபன், கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ​தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் திறமைக் கொண்டவரான ​ஜெயாபார்த்திபன், 1986 ஆம் ஆண்டு சலங்கை ஒலி எனும் தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்து அந்த மகளி​ர் இதழை சிறப்பாக வழிநடத்தி வந்தார். "சில நினைவுகள், சில கனவுகள்" என்ற நூல் உட்பட சில ​நூல்களையும் ஜெயா பார்த்திபன் எழுதியுள்ளார்.

அன்னாரது நல்லடக்க இறுதிச்சடங்கு இன்று ஜுலை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் எண். 5, ஜாலான் 14/37 C,பெட்டாலிாங் ஜெயா,என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற வேளையில் ஒரு மணியள​வில் அவரின் உடல் கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்படவிருக்கிறது-

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன