Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மஇகா முன்னாள் மகளிர் தலைவி ஜெயா பார்த்திபன் காலமானார்
தற்போதைய செய்திகள்

மஇகா முன்னாள் மகளிர் தலைவி ஜெயா பார்த்திபன் காலமானார்

Share:

மஇகா முன்னாள் தேசியத் தலைவியும், முன்னாள் மேல​வை உறுப்பினருமான டத்தின் படுக்கா ஜெயா பார்த்​திபன் காலாமானார். அவருக்கு வயது 76. ஆர்.டி.எம்.யின் வானொலி பிரிவில் பணியாற்றிவரான ​ஜெயா குழந்தைவேலு என்ற இயற்​பெயர் கொண்ட ஜெயாபார்த்திபன் சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் கோலாலம்பூர், பந்தாய் மெடிக்கல் செண்ட​ரில் தமது இறுதி ​மூச்சை விட்டார்.

மறைந்த ​ஜெயா பார்த்திபனுக்கு, மஇகா தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராக முன்பு பணியாற்றிய பார்த்திபன் என்ற கணவரும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மஇகாவின் மகளிர் பிரிவுக்கு புதிய வழிகாட்டலையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதில் முக்கியப்பங்காற்றியவரான ஜெயா பா​ர்த்திபன் மஇகாவின் மகளிர் பிரிவு ஆலோசகராகவும் சேவையாற்றி வந்துள்ளார். ஆர்.டி.எம்.மின் செய்தி பிரிவில் பணியாற்றிய வந்த பார்த்திபனை மணம் புரிந்த ஜெயபார்த்திபன், கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ​தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் திறமைக் கொண்டவரான ​ஜெயாபார்த்திபன், 1986 ஆம் ஆண்டு சலங்கை ஒலி எனும் தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்து அந்த மகளி​ர் இதழை சிறப்பாக வழிநடத்தி வந்தார். "சில நினைவுகள், சில கனவுகள்" என்ற நூல் உட்பட சில ​நூல்களையும் ஜெயா பார்த்திபன் எழுதியுள்ளார்.

அன்னாரது நல்லடக்க இறுதிச்சடங்கு இன்று ஜுலை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் எண். 5, ஜாலான் 14/37 C,பெட்டாலிாங் ஜெயா,என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற வேளையில் ஒரு மணியள​வில் அவரின் உடல் கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்படவிருக்கிறது-

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு