May 2, 2026
Thisaigal NewsYouTube
பொந்தியனில் காரை திருடிய போதை ஆசாமி - சில மணி நேரங்களில் மடக்கிப் பிடித்த போலீசார்
தற்போதைய செய்திகள்

பொந்தியனில் காரை திருடிய போதை ஆசாமி - சில மணி நேரங்களில் மடக்கிப் பிடித்த போலீசார்

Share:

பொந்தியன்-இல் இயக்கத்தில் இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை, சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஜலான் தெலுக் கெராங் பகுதியில் கருப்பு நிற கார் ஒன்று, அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டதாகப் புகார் கிடைத்ததாக, பொந்தியன் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரத் ஹுஸைன் பின் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாலை 2.45 மணியளவில், ஆயர் பாலோய் பகுதியில் உள்ள கம்போங் பாரிட் மொஹாயத் அருகே ஜலான் பாரிட் பஞ்சாங் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, காணாமல் போன கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்காரை செலுத்தி வந்த 44 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஏற்கனவே 5 போதை வழக்குகள் உட்பட 7 வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் தெரியவந்ததாகவும் ஹஸ்ரத் தெரிவித்துள்ளார்.

Related News

இ-ஹெய்லிங் ஓட்டுநர் முறைத்ததால் ஓடும் காரிலிருந்து சாலையில் குதித்த பெண்

இ-ஹெய்லிங் ஓட்டுநர் முறைத்ததால் ஓடும் காரிலிருந்து சாலையில் குதித்த பெண்

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் -  ஜலாலுதீன் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் - ஜலாலுதீன் அறிவிப்பு

லாரி ஓட்டுநரின் மகள்... சன்வே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அமெரிக்கா நாசா வரை / நந்தினியின் அசுரப்பயணம்

லாரி ஓட்டுநரின் மகள்... சன்வே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அமெரிக்கா நாசா வரை / நந்தினியின் அசுரப்பயணம்

"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்

"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்

ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு KPKT-யிடமிருந்து பராமரிப்பு ஒதுக்கீடாக சுமார் RM100,000 கிடைத்துள்ளது.

ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு KPKT-யிடமிருந்து பராமரிப்பு ஒதுக்கீடாக சுமார் RM100,000 கிடைத்துள்ளது.

கே.எல்.ஐ.ஏ (KLIA) வளாகத்தில் பிச்சை எடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது: போலீஸ் நடவடிக்கை

கே.எல்.ஐ.ஏ (KLIA) வளாகத்தில் பிச்சை எடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது: போலீஸ் நடவடிக்கை