Jul 1, 2026
Thisaigal NewsYouTube
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி
தற்போதைய செய்திகள்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

Share:

புடி மதானி டீசல் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மலேசியர்கள் ஒரு லிட்டர் டீசலை RM2.10 என்ற மானிய விலையில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். உலகளவில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும், மலேசிய அரசாங்கம் வழங்கும் இந்த விலை உலகிலேயே மிகக் குறைந்த விலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்று ஜூலை 1 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் டீசலின் உண்மையான சந்தை விலை ஒரு லிட்டருக்கு RM3.97 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியக் கொள்கையின் மூலம் மீதமுள்ள தொகையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. மக்கள் மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்த மானிய டீசலைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியற்ற வெளிநாட்டினரோ அல்லது டீசல் கடத்தலில் ஈடுபடும் சட்டவிரோதக் கும்பலோ அரசு மானியத்தைச் சுரண்டுவது முற்றாகத் தடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், நாட்டின் நிதி நிலையைச் சீரமைக்க இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் உதவும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Related News

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்