Mar 19, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவுகள் கண்டனம்
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவுகள் கண்டனம்

Share:

பேராக், மார்ச் 27-

பேராக், பிடோர், ஜாலான் ப்ருசேஹ்-விலுள்ள KK மார்ட் கடை மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அல்லா சொல் எழுதப்பட்ட காலுறையை விற்பனை செய்த சர்ச்சையை KK மார்ட் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சூழலில், அந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அக்மால் சாலெஹ் கூறினார்.

இந்நிலையில், KK மார்ட் கடை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், நிலைமையை தணிக்க செய்ய அனைத்து தரப்பினரும் அவ்விவகாரத்தை போலிசிடம் விட்டுவிட வேண்டும். போலீஸ் விசாரணையை மேற்கொண்ட பிறகு, அந்த இழிச்செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய காலுறை விற்கப்பட்ட விவகாரத்தில், KK மார்ட் நிறுவனத்திற்கு எதிராக டாக்டர் அக்மால் சாலெஹ் தொடர்ந்து முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, KK மார்ட் கடை மீது மீதான தாக்குதலை கண்டித்துள்ள பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பத்லி ஸாரி, எந்தவொரு தரப்பினரும் போலீசின் விசாரணையை மீறி செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

Related News

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இள... | Thisaigal News