சிலாங்கூர் எஃப்சி காற்பந்து வீர்ர பைசல் ஹலிம் மீது, ஆசிட் எனப்படும் எரிதிராவகம் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு நபரை போலீஸ் கைது செய்துள்ளது.
உள்நாட்டவரான 30 வயது மதிக்கத்தக்க அந்நபர், நேற்று மாலையில், பண்டார் பாரு பாங்கியில் சுற்றித்திரிந்த போது, கைது செய்யப்பட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான்தெரிவித்தார்.
தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெற, போலீஸ் அந்நபரை PETALING JAYA நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோத்தா டாமான்சாரா-விலுள்ள பேரங்காடி ஒன்றில், தேசிய காற்பந்து அணியின் வீரருமான பைசல் ஹலிம் மீது அந்த ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அது தொடர்பில் விசாரணையை முடூக்கிய போலீஸ், இதற்கு முன்பு 20 வயதுதக்க இளைஞர் ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.








