Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !
தற்போதைய செய்திகள்

வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !

Share:

ஹேமா எம் எஸ் மணியம்

கோத்தா கினாபாலு, மார்ச் 21 -

பணம் பரிமாற்ற நிறுவனத்தைப் பாதுகாப்பதாக கூறி ஒவ்வொரு மாதமும் 500 வெள்ளி பணத்தை லஞ்சமாக பெற்ற அமலாக்க அதிகாரி ஒருவரை சபா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 40 வயதுடைய அந்நபர் பணம் பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து 4,000 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் அந்நபர் நேற்று காலை 9 மணியளவில் சபா, மலேசிய ஊழை தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த போது எம்.ஏ.சி.சி -யால் கைது செய்யப்பட்டதாக கருணாநிதி கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி இன்று கோத்தா கினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படயிருப்பதாக கருணாநிதி மேலும் விவரித்தார்

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை