Johor Bahru, Pantai Lido, Jalan Skudai - யின் 3. 5 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 40 வயதிற்கு உட்பட்ட மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, அக்காரின் ஓட்டுநர் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக தெற்கு Johor Bahru மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Raub Selamat தெரிவித்தார்.
Skudai - யிலிருந்து நகர மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த அதன் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் வந்து கொண்டிருந்த காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக Raub Selamat கூறினார்.
அதி வேகமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் அது சட்டென்று தீ பிடித்து எரிந்ததுடன் சம்பந்தப்பட்ட கார் சாலையில் தடம் புரண்டதாக அவர் குறிப்பிட்டார்.








