நாட்டில் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்களை தடுப்பதற்கு தேவையான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கு சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தடுப்புக்காவல் இறப்புகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான பரிந்துரைகளை EAIC எனப்படும் அமலாக்க முகமை ஒருங்கிணைந்த ஆணையம், அரசாங்கத்தின் சிறப்பு அமைச்சரவைக் குழுவிடம் சமர்ப்பித்தப் பின்னர் சிறப்பு பணிக் குழுவை அமைக்கும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
EAIC முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப்படக்கூடிய ஓர் அமைப்பாக சிறப்புப்பணிக்குழு விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டு காலத்தில் நாட்டில் 430 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக கடந்த ஆண்டு EAIC கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








