சர்ச்சைக்குரிய 1MDB யிலிருந்து களவாடப்பட்ட சொத்துகள் மற்றும் நிதியில் 70 விழுக்காடு மீட்கப்பட்டு விட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இன்னும் 30 விழுக்காடு சொத்துகளை மீட்கும் முயற்சியில் SPRM தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் உள்ள அந்த சொத்துகளை தேடும் நடவடிக்கையில் SPRM தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அனைத்து நிதியையும் மீட்டெடுக்க வேண்டும் என்று வேட்கையில் அந்த சொத்துகளை அடையாளம் நடவடிக்கையை SPRM தீவிரப்படுத்தியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.








